Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜாதிய அவமதிப்பு.." அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை.. 15 நாட்கள் கெடு விதித்த ஆணையம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அதிகாரியை ஜாதிய ரீதியில் அவமதித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் கணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். பட்டியலின பிரிவைச் சேர்ந்த இவரை, போக்குவரத்துதுறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் இருந்தபோது, சாதிய ரீதியாக அவமானம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ராஜேந்திரனை சந்திக்க அழைத்தபோது அமைச்சர் ராஜ கண்ணப்பன், பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வைத்துள்ளேன். இல்லையென்றால், உடனே டிரான்ஸ்பர் செய்து வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன் என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.

SC Commission orders to take Action against Minister Raja Kannapan

இந்த சம்பவம் மாநில அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஜ கண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனைத்தொடர்ந்து, ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தன. இதுவெறும் கண்துடைப்பு நடவடிக்கை தான் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் இலாகா மாற்றத்திற்கு, போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் பணம் சிக்கியதும் முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது.

இதனிடையே, பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஓவை சாதி ரீதியாக பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பட்டியலின பிடிஓவை அவமதித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+