கிராம சபைக் கூட்டத்தில் 'மக்கள் பள்ளி' பற்றி எடுத்துரையுங்கள்; கல்வி அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு..!
சென்னை: அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் பள்ளி என்ற புதிய திட்டத்தை பற்றி கிராம சபைக் கூட்டத்தில் எடுத்துரைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பெற்றோருடன் விவாதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பள்ளி திட்டம் என்பது வீடுகளுக்கே சென்று ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தன்னார்வலர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாகும்.

பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்ற நாள் முதல் துறை ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த என்னென்ன வழிகள் உள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்கிறார்.

ஆலோசனைகள்
கடைநிலையில் உள்ள ஆசிரியர் முதல் துறையின் இயக்குநர் வரை அனைவரிடமும் ஆலோசனைகளை பெற்று அதற்கேற்றவாறு முடிவுகளை அமைத்துக்கொள்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். இதனிடையே கொரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டும் முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் அவர் மக்கள் பள்ளி என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

சுற்றறிக்கை
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே நாளை காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் சுதன் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

கற்றல் இடைவெளி
கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சீர் செய்ய மக்கள் பள்ளி திட்டம் மூலம் கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications