கனமழை எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! லிஸ்ட்டில் உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க
சென்னை: கனமழை காரணமாக நேற்று போல இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சேர்த்தும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழ்நாட்டை கடந்து அரபிக்கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் இது வலுப்பெற்றிருப்பதால், கடந்து செல்லும் பாதையில் கனமழையை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், இன்று டெல்டாவுடன் சேர்த்து தென் மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி
தென்காசி
விழுப்புரம்
நெல்லை
தஞ்சை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல
மதுரை
திண்டுக்கல்
விருதுநகர்
சேலம்
சிவகங்கை
மயிலாடுதுறை
கடலூர்
ராமநாதபுரம்
தேனி
கரூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
தருமபுரி
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் மணல்மேடு பகுதியில் 25 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதேபோல திருநெல்வேலியில் 20 செ.மீக்கு அதிகமாக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "திருநெல்வேலி 20 செ.மீ, மணிமுத்தாறு அணை 30 செ.மீ, மாஞ்சோலை பகுதியில் 40 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார். திருநெல்வேலியின் ஊத்து பகுதியில் சுமார் 50 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications