கனமழை எதிரொலி: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: கனமழை தொடர்ந்து வருவதால் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 18ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பல மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
திருவள்ளூரில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதால் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications