பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் உறுதி!
சென்னை: சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே பள்ளிகளுககு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குநரகம் கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

வெயில் அவதி
ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் இதுவை குறைந்த பாடில்லை. சுட்டெரித்து வரும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

தள்ளிவைக்க கோரிக்கை
பகல் நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

அமைச்சர் உறுதி
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க வாய்ப்பில்லை என்று கூறினார். ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு
வெயிலால் பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என வெளியான செய்திக்கும் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேட்டியால் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications