Kathiri Veyil: மகா ஜனங்களே! கதற விடும் கத்திரி வெயில் இன்று தொடக்கம்! அக்னி தணிக்கும் வருண பகவான்!
சென்னை: தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் வரும் 28-ந் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கும். அதேநேரத்தில் கத்திரி வெயிலின் கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே பல பகுதிகளில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமான வெப்ப நிலை பதிவாகி வருகிறது. கடந்த இரு மாதங்களாகவே கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து விட்டது. ஆனாலும் பல இடங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருவதால் இருவித காலநிலையும் நிலவுகிறது.

இந்த நிலையில் வெயிலின் உக்கிரமான காலமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த உக்கிரமான வெயில் காலம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்குமாம். இநத ஆண்டு 25 நாட்களுக்கு கத்திரி வெயில் கதகளி ஆடக் காத்திருக்கிறதாம்.
கத்திரி வெயிலின் முதல் 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். இந்த நாட்களில் வழக்கமான வெப்பநிலையை விட சற்று அதிகமாக வெப்ப நிலை பதிவாகும். ஆகையால் கத்திரி வெயில் காலத்தில் பிற்பகல் நேரங்களில் வெளியே வீணாக அலைவதைத் தவிர்க்க வேண்டும்,
இருப்பினும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இந்த வாரம் மழைக்கு சாத்தியமான வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்கின்றது வானிலை ஆய்வு மையம்.. இதனால் கத்திரி வெயில் நம்மை கதறவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு தேவை இல்லையாம்.
அதற்காக கத்திரி வெயில்தானே.. கோடை மழையும் வரும்தானே.. ஒரு கை பார்ப்போம் என வீர சாகசங்களில் ஈடுபடாமல், இந்த வெயிலின் உக்கிரத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்
இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை பதிவாகும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications