ஆக்சிஜன் தட்டுப்பாடு.. முந்தைய பாதிப்புகளிலிருந்து பாடம் கற்காத மத்திய அரசு.. எஸ்.டி.பி.ஐ. சாடல்..!
சென்னை: கொரோனாவால் கடந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை என எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. எனினும் நாள்தோறும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவமனை சிகிச்சைகளில் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்களே இப்போது அதிகரித்து வருகின்றன.''
''டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
ஏற்கனவே கடந்த ஓராண்டாக கொரோனாவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டும், அந்த பாதிப்புகளிலிருந்து கிடைத்த பாடங்கள் மூலம் போதிய முன்னேற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாததன் விளைவே தற்போதைய ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவர் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவையாகும்.''
''இந்த பற்றாக்குறை காரணமாக வட மாநிலங்களில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக சில நாட்களுக்கு முன்பு நான்கு உயிர்கள் பலியான செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.''
''தேவைக்கு அதிகமாக இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு உதவுவது தான் சிறந்த மனிதாபிமான நடவடிக்கையாகும். அதேவேளையில், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசிடம் அனுமதி கோராமல் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பது என்பது கண்டிக்கத்தக்கது.''
''கொரோனா பரவல் துவங்கியது முதல் அனைத்து உயிர்காக்கும் மருந்துகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு போதிய உயிர்காக்கும் மருந்துகளை வழங்காமல் பாதிப்பிலும் அரசியல் செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி மாநில அரசுகளின் கைகளை கட்டிவிட்டு, தொற்றுப் பரவலை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறிவருகின்றது.''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications