“புதிய மொந்தையில் பழைய கள்”..ஸ்டாலின் முஸ்லிம்களை சந்தித்தது ஏன் தெரியுமா? போட்டுடைத்த எஸ்டிபிஐ
சென்னை: சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை “புதிய மொந்தையில் பழைய கள்” என எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில பிரதிநிதிகளை அழைத்துப் பேசி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி 09ம் தேதி சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து, கடந்த காலங்களில் திமுக அரசு செய்த, செய்து வந்த சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்தும், சில வாக்குறுதிகளையும் அப்போது அவர் அறிவிப்பாக வெளியிட்டார். சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தவரை அழைத்து பேசியது போன்று முஸ்லிம்களையும் அழைத்து பேச வேண்டும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபி கட்சி அப்போது வலியுறுத்தியது.

இந்த கூட்டம் எதிர்வரும் தேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல், சிறுபான்மை சமூக மக்கள் தொடர்ச்சியாக முன் வைக்கும் கோரிக்கைகளை உண்மையிலேயே நிறைவேற்றும் கூட்டமாக, சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டமாக அது அமைய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில்தான் நேற்றைய தினம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளை முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, திமுக அரசு கடந்த காலங்களில் செய்த திட்டங்கள் குறித்து பேசியதோடு, சிலவற்றை வாக்குறுதிகளாகவும் அறிவித்துள்ளார்.
ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆன போதும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகள் மீது இதுநாள் வரையில் எவ்வித அக்கரையும் செலுத்தாத, முஸ்லிம் சமூகத்திற்கான எந்தவித பொருளாதாரத் திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு, இந்த கூட்டத்தின் மூலமாக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த கால திட்டங்கள் குறித்தும், ஏற்கனவே கிறிஸ்தவ சமூகத்தினரை அழைத்து பேசிய போது அறிவித்த திட்டங்களையும், சில சிறிய கண் துடைப்பு திட்டங்களையும் மட்டுமே அறிவிப்பு செய்துள்ளார்.
'புதிய மொந்தையில் பழைய கள்' என்கிற ரீதியில், ஏற்கனவே உள்ள மற்றும் சரிவர செயல்படுத்தப்படாத பழைய திட்டங்களை, கூட்டத்தில் கலந்துகொண்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர் திரும்ப எடுத்து வைத்துள்ளார். முதல்வரின் அறிவிப்பில் பெரும்பாலானவை வாக்குறுதி அறிவிப்புகளாக உள்ளன. ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வக்பு வாரியம் மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகள், வாழ்வாதாரம், பிரதிநிதித்துவம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் இன்னும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. ஐந்து சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை, அரசின் உயர் பதவிகளில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவ கோரிக்கை, நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் முழுமையான விடுதலை கோரிக்கை, முஸ்லிம்களுக்கான சமூக நலத்திட்டங்கள், பொருளாதார திட்டங்களை மேம்படுத்த சச்சார் கமிட்டி போன்றதொரு கமிட்டியை அமைக்கும் கோரிக்கை என்பன உள்ளிட்டவை பாராமுகமாகவே உள்ளன.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதிற்கொண்டு நடத்தப்பட்ட இந்த கூட்டம் தாமதமான ஒன்றாக இருந்தாலும் கூட, தமிழக முதல்வர் அவர்கள் இந்த கூட்டத்தில் வாக்குறுதிகளாக அறிவித்த சில திட்டங்களையாவது, தேர்தல் செயல்பாடுகளாக அல்லாமல், மக்கள் நல செயல்பாடாக கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications