தேசிய குடிமக்கள் பதிவேடு... மத்திய அரசு நயவஞ்சகமாக நடக்கிறது... எஸ்.டி.பி.ஐ. சாடல்..!
சென்னை: தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் மத்திய அரசு நயவஞ்சகமாக நடந்துகொள்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புதிய படிவத்தில் வழக்கத்திற்கு மாறான கேள்விகள் இடம்பெற்றிருப்பதால் தமிழக அரசு இதை நிராகரிக்க வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியிருப்பதாவது;

உள்நோக்கம்
ஒன்றிய அரசு மூலம் மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான வசிப்பிடம் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான இத்தகைய தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.

எதிர்ப்புகள்
கடந்த ஆண்டு எழுந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் மீண்டும் தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான வசிப்பிடம் ஆகியவை தொடர்பான கேள்விகள் அடங்கிய படிவத்தையே மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் என்பிஆர் குறித்து ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளும், அதோடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெற்றோர் பிறப்பு குறித்து கூடுதலாக கேட்கப்படும் கேள்விகளும் மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

என்.பி.ஆர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (என்.பி.ஆர்.) புதிப்பிக்கப்படுவதன் உள்நோக்கம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) மறைமுகமாக அமல்படுத்துவதே அல்லாமல் வேறு எதுவுமில்லை என்பதுவும் தெளிவாகிறது. ஆகவே, வழக்கத்துக்கு மாறாக கேள்விகளை கொண்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்.

நிராகரிக்கவும்
மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த நடவடிக்கையின் பின்னால், என்.ஆர்.சி. மற்றும் சிஏஏ சட்டங்களை அமல்படுத்தும் நயவஞ்சக திட்டமும் உள்ளடங்கியுள்ளதாக தெரிகிறது. ஆகவே ஒன்றிய அரசின் இந்த முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications