நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல.. பாரத மாதா கீ ஜே என சொல்ல முடியாது: சீமான்
சென்னை: நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல; பாரத மாதா கீ ஜே என சொல்ல முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.

அப்போது, பாரத மாதா கீ ஜே என்பவர்களே இந்தியாவில் வாழ முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது தொடர்பாக சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல. தமிழ்த் தாயின் பிள்ளைகள் நாங்கள். எங்களால் பாரத் மாதா கீ ஜே என சொல்ல முடியாது. இந்த நிலம் நாடாவதற்கு முன்பே பன்னெடுங்காலமாக வாழ்கிறவர்கள் நாங்கள்.
பெருந்தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்து பிள்ளைகல் நாங்கள். இந்தியா எங்களது தேசமும் அல்ல. எங்களது தேசம் தமிழ்தேசம். நாங்கள் இந்தியா என்கிற நாட்டின் குடிமக்கள்.
ஆங்கிலேயர்களால் ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா. இது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதைத்தான் ராஜ்யசபாவில் ப. சிதம்பரமும் சுட்டிக்காட்டி பேசினார்.
பிரதேசங்களின் உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டால் உள்நாட்டு யுத்தத்தையே நீங்கள் சந்திக்க வேண்டும். அது தவிர்க்க முடியாதது. அதை நோக்கி மத்திய அரசு தள்ளிவிடாமல் இருப்பதுதான் தேச ஒற்றுமைக்கு நல்லது.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications