உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்!
விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளை வழங்கினார் சீமான்.
சென்னை: என் வழி தனி வழி என்று சீமான் செய்து வரும் சில வேலைகளை மக்கள் சபாஷ் போட்டு வருகின்றனர்.
தேர்தல் வியூகம், கூட்டணி குழப்பம், என்று எல்லா கட்சிகளும் பரபரப்பாக இயங்கிவரும் வேளையில், நாம் தமிழர் கட்சி பட்டைய கிளப்பி வருகிறது, அதாவது நேரிடையாகவே மக்களை சந்தித்து வருகிறது.
கஜா புயலுக்கு பிறகு அரசுகள், தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என ஆளாளுக்கு ஒவ்வொரு விதத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு உதவினார்கள், உதவியும் வருகிறார்கள். இதில் சீமானின் உதவிகள் புயல் பாதித்தது முதல் இப்போது வரை பேசப்பட்டு வருகின்றன.

சீமானின் உதவி
டெல்டா மக்கள் கஜாவால் பயிர்கள், நிலங்கள், தென்னை, வாழைகளை இழந்தபோதுதான் மனதளவில் உருக்குலைந்து விழுந்துவிட்டார்கள். இதனை சிலர் தாங்க முடியாமல் தற்கொலையிலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சமயத்தில்தான் சீமானின் உதவி பெரிதும் உதவியது.

கவுன்சிலிங் பேச்சு
மனம் உடைந்து போயுள்ள தென்னை உள்ளிட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தனது தனது உரையை நிகழ்த்தி வந்தார். சீமானின் ஊக்கமளிக்கும் இந்த பேச்சிற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. பலருக்கு நம்பிக்கை பிறந்தது. கிட்டத்தட்ட இது கவுன்சிலிங் போலதான். இதனை பெரும்பாலும் வேறு யாரும் செய்யவில்லை. இந்த விதத்தில் சீமானின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

தென்னங்கன்றுகள்
அதேபோல மற்றொரு விஷயம், விவசாயிகளை மனதளவில் பக்குவப்படுத்திவிட்டு, அவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வினை கையில் எடுத்தார். 50 ஆயிரம் தென்னங்கன்றுகளை தருவதாக கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இழந்தது கிடைத்தது
விவசாய மக்களோடு தோள் மீது கை போட்டு கொண்டு, பரஸ்பரம் உரையாடி சீமான் ஒவ்வொரு தென்னங்கன்றையும் தருகிறார். அதனை பெற்றுக் கொண்ட விவசாயிகளுக்கு என்னவோ போன வாழ்வு திரும்பவும் வந்ததுபோல ஒரு உணர்வு ஏற்படுகிறதாக சொல்கிறார்கள்.
|
விடாத சீமான்
நேற்றுகூட, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெற்குகோட்டையில் பாதிக்கப்பட்ட வேளாண் பெருங்குடி மக்களுக்குத் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பலர் ஓரளவுக்கு உதவிவிட்டு, மற்ற வேலைகளில் மூழ்கிவிட்ட நிலையில், இன்னமும்கூட டெல்டா மக்கள் மீண்டு வர சீமான் எடுத்து வரும் பங்கு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications