மலை மாடுகளோடு நைக் ஷூவுடன் மலையேறிய சீமான்! தேனியில் நாம் தமிழர் செய்த சம்பவம்! சொன்னதை செஞ்சிட்டாரே
தேனி: மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தோடு தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நாட்டு இன மாடுகளோடு மலை மேல் சென்ற சீமான் தடையை மீறி அவற்றை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றார். இதனால் போலீசார் நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாடுகளுக்கு முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது மாநாட்டில் பேசியிருந்த சீமான் தடையை மீறி மலைப்பகுதியில் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன் என கூறி இருந்தார்.

வனப்பகுதிக்குள் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை நாட்டு இன மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி செல்லும் சாலையில் சுமார் 1000 நாட்டு இன மாடுகளை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து சென்று வனத்துறையினர் அனுமதியை மீறி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
அப்போது சீமானை வனத்துறை அலுவலர் நாகராஜன், அன்பரசன் உள்ளிட்ட வனத்துறையினர் தடுத்து மலை மேல் மாடுகளை ஏற்றி செல்ல மறுத்தனர. இதனால் சீமான், வனத்துறை அலுவலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து தடையை மீறி சீமான் விவசாயிகளுடன் 1000 நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இதனால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கூறுகையில்," எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் தடை செய்தால் மீண்டும் மாடுகளை மலை மேல் ஏற்றி போராட்டம் நடத்துவோம். மாடுகளை மலை மேல் ஏற்றி செல் தடை என அறிவித்துள்ளீர்கள் அதற்கு மாற்று இடம் ஏன் அறிவிக்கவில்லை. எத்தனை ஆண்டுகளாக மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறோம். திடீரென்று வனவிலங்குகள் மீது உங்களுக்கு அக்கறை வந்தால் நாங்கள் எங்கள் மாடுகளை எங்கே சென்று மேய்ப்பது.
வெடிகளை வைத்து மலைகளை தகர்க்கும் போது பாதுகாப்பாக இருக்கும் வனவிலங்குகள், எங்கள் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா? கால்நடைத்துறை ஒன்று இருக்கிறது. அதற்கு அமைச்சர் என்றும் இவர் இருக்கிறார். ஆனால் மாடுகளை பாதுகாப்பதில்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications