Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சீமானின் சினிமாஸ்'-பிரபாகரன் நடத்திய சீரியஸ் டிஸ்கஷன்..விஜய்க்கு சொன்ன 'பகலவன்' கதைக்கு ஒப்புதலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை ராணுவத்துடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் தமது இலங்கை பயணத்தின் போது தாம் எடுத்த திரைப்படங்கள் குறித்தும் புதிய திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும்; தமது புதிய படத்துக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்றும் தமக்கு தீவிரமான ஆலோசனைகளை வழங்கியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவரித்துள்ளார்.

இலங்கை பயணம் குறித்து இதுவரை பல்வேறு 'அறியப்படாத தகவல்களை' வெளியிட்டு வரும் சீமான் தற்போது முதல் முறையாக பிரபாகரனுடனான திரைப்படங்கள் குறித்த டிஸ்கஷன்களை விரிவாக விவரித்துள்ளார்.

seeman prabhakaran

மதுராந்தகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: இலங்கைக்கு சென்றிருந்த போது பிரபாகரன், அடுத்து என்ன படம்பா என கேட்டார். என்னுடைய வாழ்த்துகள் படம் தோற்றுப் போய்விட்டது என் அண்ணனுக்கு (பிரபாகரனுக்கு) தெரிந்திருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான், என்னுடைய வாழ்த்துகள் படம் தோல்வி அடைந்ததை பிரபாகரனுக்கு தெரிவித்திருந்தார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, படம் ஓடவில்லை என தம்பி வருத்தமாக இருப்பான் என்கிறார் அண்ணன் பிரபாகரன். நான் வருத்தப்படாமல்தான் இருந்தான். ஆனால் பிரபாகரன், தம்பி வருத்தமா இருப்பாரோ என நினைத்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.. அவருக்ககு தெரிந்துவிட்டது.

சீமானின் சினிமா குறித்த பிரபாகரன் விமர்சனம்: அப்போது, நமக்கு எதுக்குப்பா பூ, கவிதை எல்லாம் என்றார். அப்போதுதான் நமக்குதான் படத்தை பற்றி சொல்கிறார் என நினைத்துக் கொண்டேன். மேலும், காதல் என்பது பருவ கால உணர்ச்சி.. அது எல்லோருக்கும் வரக் கூடியது. தமிழர்களுக்கு இல்லாதது மானமும் வீரமும்தான். அது வருகிற மாதிரிதான் படம் எடுக்கனும். எப்படி? 'தம்பி' படம் மாதிரி.. என்றார். அடுத்த வார்த்தையாக, நாம் திரையிலும் அடிக்க வேண்டும்.. தரையிலும் அடிக்க வேண்டும்.. அப்பதான் நமக்கு விடுதலை வரும் என்றார். அப்பதான் எனக்கும் புரிந்தது.

விஜய்க்கு சொன்ன பகலவன் கதைக்கு ஓகே: அடுத்து என்னப்பா படம் என்றார் பிரபாகரன். நான் 'பகலவன்' கதையை சொன்னேன் (நடிகர் விஜய்க்கு சீமான் சொல்லி இருந்த கதை). அது அண்ணனுக்கு (பிரபாகரனுக்கு பிடித்திருந்தது).. நல்லா இருக்கு என்றார். அப்புறம், சின்ன சின்ன பசங்களை வைத்து 'கோபம்' என்ற கதையை சொன்னேன். அப்போது, அருமையாக இருக்கு.. இதை எடுங்க என்றார் பிரபாகரன்.

சீமான் படத்துக்கு என்ன பெயர்.. தீவிர டிஸ்கஷன்: எங்க அண்ணன் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி.. அவரைப் பற்றி என்னிடம் பிரபாகரன் கூறுகையில், நமது முன்னவர்கள் எல்லாம் தமிழை கொட்டிவிட்டார்கள்.. நீங்கள் தமிழை ஏந்துங்கள் என தமிழ்த்துறை பொறுப்பாளராக வைத்திருக்கிறேன் என விளக்கம் தந்தார் பிரபாகரன். அப்போது தமிழேந்தி அண்ணன், கோபம் என்பது சமஸ்கிருத சொல். என்னை போடா வாடா என்றுதான் பேசுவார்கள்.. அதனால்.. டேய்.. கோபம் என்பது சமஸ்கிருதம்.. அதனால் 'சீமானின் சினம்'.. 'சீமானின் சீற்றம்'.. அப்படி எடு என ஆலோசனை தந்தார் தமிழேந்தி. அப்போது, தமிழேந்தியை சைகையாலேயே வாயை மூடிக் கொண்டு இருக்கவும் என்றார் பிரபாகரன்.

2026-ல் சலங்கை கட்டுவோம்: அத்துடன், தமிழேந்தியிடம் , அவரு (சீமான்) சும்மாவே ஆடுவாரு.. நீங்க சலங்கையை வேற கட்டிவிடுறீங்களா என்றார் பிரபாகரன். அன்று பிரபாகரன் சொன்ன சலங்கை எப்போது கட்டப்படுகிறது தெரியுமா? 2026-ம் ஆண்டு.. அன்று படைப்போம் புதிய அரசியல் வரலாறு.. இவ்வாறு சீமான் விவரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+