சட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல்
வைகோ மீதான தேசதுரோக வழக்கின் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவித்தார்
Recommended Video

சென்னை: சட்டத்தில் ஓட்டை இருக்கா.. அப்படி ஓட்டை இருக்குன்னா அதை இவரு அடைக்க வேண்டியதுதானே என்று எச்.ராஜாவை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன், 262-வது குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது நீட் தேர்வு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்பது குறித்த கேள்விகளை எழுப்பினர். அதற்கு சீமான் சொன்னதாவது:

ஒரே சுடுகாடு
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவதே நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. நான் என்ன கேட்கிறேன், ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு கொண்டு வர்றீங்க சரி, ஒரே குளம் எல்லாரும் குளிக்கலாம், ஒரே கோயில், எல்லாரும் உள்ளே போகலாம், ஒரே சுடுகாடு, எல்லாரையும் ஒரே இடத்துல புதைக்கலாம்.. இப்படி கொண்டு வர முடியுமா உங்களால்?

எவ்ளோ கேவலம்
வீடு முழுக்க குப்பையை கொட்டி வெச்சிட்டு, வெளியில வெள்ளை அடிக்கிறது எவ்வளவு கேவலமானது? அடிப்படையே அழுகி போய் கிடக்கு, அதை சரிபண்ணாம ஒரே நாடு, ஒரே தேர்தல்...ன்னு என்ன இது?

150 டிஎம்சி
நதி நீர் இணைப்பு என்பது ஏமாற்று வேலை, இனிப்பான பசப்பான வார்த்தை, இதை சாத்தியப்படுத்துவது சாதாரணமானது இல்லை. கோதாவரி- காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துவிடுமா? ஏற்கனவே பாராளுமன்றம், உச்சநீதிமன்றம் சொல்லியும் 150 டிஎம்சி தண்ணீரை தர மறுக்கிற கர்நாடகா, இப்போ நதிகளை இணைச்சிட்டால் மட்டும் தந்துடுவாங்களா?

வைகை
மறுபடியும் திறந்து திறந்து விட்டுடுவாங்களா? பெரிய மேதைங்க மாதிரி பேசறாங்க.. தாமிரபரணியை எங்க கொண்டு போய் இணைப்பீங்க? வைகையை எங்க கொண்டு போய் சேர்ப்பீங்க? ஆர்எஸ் மங்கலம் கண்மாய்ல கொண்டு போய் சேர்ப்பீங்களா?" என்றார்.

என்ன தண்டனை?
மாநிலங்களவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் எச்.ராஜா சொல்லி உள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், "ஓட்டை இருக்குன்னா அதை அவர் அடைக்க வேண்டியதுதானே, யாரு வேணாம்னு சொல்றது? பேசறதே தேச துரோகமா? அப்படின்னா இவர் நீதிமன்றத்தை அவமதிச்சு பேசினாரே.. இவருக்கு என்ன தண்டனை தர்றது?

அதுதான் தப்பு
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரித்து பேசறது குற்றம் ஆகாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பில் சொல்லியிருக்கு. ஆனால் அந்த இயக்கத்துக்கு பண உதவி செய்தாலோ, ஆயுத உதவி செய்தாலோ அதுதான் குற்றம் ஆகும் என்று சொல்கிறது. ஆதரிச்சு பேசுறது குற்றமே இல்லை" என்று பதிலளித்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications