விளாசிட்டாரே சீமான்.. கவனிச்சீங்களா? "ஐயா கருணாநிதி காரணம்"னு சொன்னதுமே.. குஷியில் துள்ளிய "தம்பிகள்
சென்னை: 2 நாட்களாகவே, சீமான் பேசிய வீடியோ ஒன்றினை, நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? சீமான் என்ன பேசினார்?
நடிகை விஜயலட்சுமி விவகாரம் இந்த ஒரு மாத காலமாகவே பரபரப்பாக பேசப்பட்டது. சீமான் எந்த நேரமும் கைதாவார் என்ற செய்திகளும் வட்டமடித்தன.. ஆனால், பரபரப்புகள் அதிகமாகி கொண்டே போனதே தவிர, சம்பவத்தின் முடிவு சுபம் போல ஆகிவிட்டது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.

கயல்விழி: இந்த வழக்கு தொடர்பாக தானும் ஆஜராக வேண்டியிருப்பதால், சீமான் மனைவி பெருத்த வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருப்பார் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கேஷூவலாகவும், இயல்பாகவும் சீமானுடன் கயல்விழி வந்ததும், செய்தியாளர்களிடம் சரளமாக பேசியதும், பலரையும் கவனிக்க வைத்தது.. விஜயலட்சுமி விஷயத்தில், தனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடு சீமானுடன் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
கயல்விழியின் இந்த பேச்சினை தமிழக மக்கள் கவனித்த அதேசமயத்தில், நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவர் தடா நா. சந்திரசேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கயல்விழியின் பேச்சு அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. முதன்முறையாக இந்த மேடையில்தான் கயல்விழி உரையாற்றினார்.
கண்கலங்கிய பேச்சு: என்ன பேசுறதுன்னே தெரியல, மேடையில் பேசி பழக்கமில்ல சீமானுக்காக என்னை பொண்ணு பார்த்தவரே மாமா தான் நா. சந்திரசேகரன்). ஆரம்பத்தில் எங்க 2 பேருக்கும் சின்ன சின்ன பிரச்சினை வரும். அப்போ அவரு என்கிட்ட சொல்ற ஒரே வார்த்தை, "தம்பி (சீமான்) ரொம்ப நல்லவன்மா.. அவன் எது பண்ணாலும் சரியாதான் இருக்கும்..ம்மா" என்பார், மாமா உங்களை நாங்கள் ரொம்ப தவற விடுறோம். தனிப்பட்ட முறையில் நான் தவற விடுறேன்" என்று தழுதழுத்த குரலில் கயல்விழி பேசவும், சீமானும் கண்கலங்கினார்.
இதற்கு பிறகு, சீமான் பேசும்போது, தடா.நா சந்திரசேகரனின் நினைவுகளை உணர்ச்சிப்பெருக்குடன் பகிர்ந்து கொண்டார்.. அப்போது கருணாநிதி குறித்தும் சீமான் பேசினார்.
கருணாநிதி: "இப்போ நான் ஒரு விஷயத்தை சொல்லி ஆகணும். நான் எப்படி மூத்தவருக்கு கடமைப்பட்டிருக்கிறேனோ, அதே அளவுக்கு ஐயா கருணாநிதிக்கும் கடன்பட்டிருக்கிறேன்... என் தலைவன் பிரபாகரனின் தலைக்கு 10 லட்சம் ரூபாயை அறிவித்து சுவரொட்டி ஒட்டி, "இவன்தான் உங்கள் தலைவன்" என தமிழர்களுக்கு சிங்களன் எப்படி அடையாளம் காட்டினானோ, அதேபோலவே, என்னை தொடர்ச்சியாக சிறைப்பிடித்து, இதோ உங்கள் தலைவன் என அடையாளம் காட்டியவர் ஐயா கருணாநிதி தான்" என்றார் சீமான்.
சீமான் இப்படி சொன்னதுமே, சீமானின் தம்பிகளின் கைதட்டல் அரங்கையே அதிர வைத்தது. கயல்விழி பேச்சும், சீமானின் இந்த பேச்சும்தான், இணையத்தில் 2 நாட்களாகவே வட்டமடித்து கொண்டிருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications