பழிப்பது குறையாது..கழிப்பது இயலாது! வார்த்தையில் விளையாடி வைரமுத்து வாழ்த்து! சீமானின் ரியாக்சன்..?
சென்னை: மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியை கவிஞர் வைரமுத்து பாராட்டியிருந்த நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தவிர்த்து அனைத்து வேட்பாளர்களுமே படுதோல்வியை சந்தித்தனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி சிறப்பான முன்னேற்றத்தை சந்தித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அந்த கட்சியினர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தாலும் 8.1 சதவீத வாக்கை பெற்று மாநில கட்சிகளில் சிறந்த வாக்கு வங்கியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் அந்த கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக அரசியலில் கால் பதித்த நாம் தமிழர் கட்சி அதற்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறது. 2016ல்வெறும் ஒரு சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த அந்த கட்சி 2019 3.8 சதவீதமாக அதிகரித்தது. 2021ல் 6.7 சதவீதமாக உயர்ந்த அந்த கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது 2024ல் 8.1 சதவீத வாக்குகளை குவித்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என களமிறங்கிய நாம் தமிழர் கிட்டத்தட்ட அதில் பாதியை தாண்டிவிட்டது என சொல்லலாம்.
வாக்கு சதவீதத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கின்றனர். ஏழு பேர் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். சிவகங்கையில் அதிகபட்சமாக நாம் தமிழர் வேட்பாளர் 1.63 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார்.

இதனையடுத்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் உள்ளிட்டோர் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் தனித் தனியே சீமான் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் சீமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து," மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன் ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது. இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது. ஆனால் இனி - கழிப்பது இயலாது. வாழ்த்துகிறேன்." என கூறியிருந்தார்.
அதற்கு சீமான் நன்றி தெரிவித்து எக்ஸில் பதிவிட்டுள்ளார். அதில்,"பெருமதிப்புமிகு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்த எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி..!" என கூறியுள்ளார்.
-
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications