என்னாது டைரியா?.. அது கற்பனை.. என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனித சூழ்ச்சி பலிக்காது- சேகர் ரெட்டி
சென்னை: எனக்கு தெய்வ சக்தி இருப்பதால் மனிதர்களின் சூழ்ச்சி பலிக்காது என சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் டைரி எல்லாம் ஒன்றுமே இல்லை, யாரோ வீண் பழி சுமத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு திடீரென ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு அறிவித்த இந்த நடவடிக்கையின் பெயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும்.
அப்போது புதிய ரூ 2000 நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. இந்த நிலையில் ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய ரூ 2000 நோட்டுகளை வாங்கியதாக புகார்கள் எழுந்தன.

2017 ஆம் ஆண்டு சோதனை
இதையடுத்து சென்னையில் இருக்கும் அவரது வீட்டில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக புதிய ரூ 2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ மொத்தம் ரூ 24 கோடியை கைப்பற்றியது தெரியவந்தது.

வேலூரில் நடத்தப்பட்ட சோதனை
சென்னை, வேலூரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 14 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன. இந்த நிலையில் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டது தெரியவந்தது.

12 பேரின் பெயர்கள்
அந்த டைரியில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்சி சம்பத் உள்பட 12 பேரின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த டைரியில் மேற்கண்ட நபர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாகவும் விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை இவர்கள் மறுத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி
அது போல் முன்னாள் அதிமுக அமைச்சரும் இன்னாள் திமுக அமைச்சருமான செந்தில் பாலாஜியின் பெயரும் இந்த டைரியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். தனது பெயர் டைரியில் இருந்தால் காட்டுங்கள் என செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

தமிழகம்- புதுவை
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு- புதுவை ஆலோசனைக் குழுத் தலைவராக இரண்டாவது முறையாக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். சென்னை தியாகராய நகர் பெருமாள் கோயிலில் பதவியேற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சிவப்பு நிற டைரி குறித்து கேட்கப்பட்டது.

மனித சூழ்ச்சி பலிக்காது
அவர் கூறுகையில் அது கற்பனை. யாரோ சிலர் இது போன்று கூறி வருவதால் பிரச்சினை இல்லை. உயர் பதவிகளுக்கு வந்தால் சிக்கல்கள் வருவதும் இயல்புதான். என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனித சூழ்ச்சி பலிக்காது. எனக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை சேர்க்க வேண்டாம் என்றார் சேகர் ரெட்டி.
-
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications