Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வமகள் சேமிப்பு திட்டம்.. 8.2% வட்டி வேண்டுமா? இந்த 2 ஆவணங்களை உடனே இணையுங்கள்.. செல்வ மகள் லாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட மிகச்சிறந்த சேமிப்புத் திட்டமாகும்.. இத்திட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக தாத்தா-பாட்டி பெயரில் உள்ள கணக்குகள் மற்றும் ஆவணங்கள் இணைப்பு குறித்த புதிய நெறிமுறைகள் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.. இது குறித்த தகவல்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..

பெண் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் செல்வமகள் சேமிப்புத் திட்டம்.. இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக Sukanya Samriddhi Yojana என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கான நீண்டகால சேமிப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டது..

Selvamagal Semippu Thittam Benefits

இந்த திட்டத்தில் சமீப காலமாக சில முக்கியமான விதிமுறை விளக்கங்கள் மற்றும் ஆவண கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன..

செல்வமகள் சேமிப்பு கணக்கு

குறிப்பாக கணக்கை யார் தொடங்கலாம், யார் நிர்வகிக்கலாம் என்ற விஷயத்தில் தெளிவான நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.. விதிப்படி, ஒரு பெண் குழந்தைக்கான செல்வமகள் சேமிப்பு கணக்கை அவளுடைய சட்டபூர்வமான பெற்றோர் அல்லது இயற்கை பாதுகாவலர் மட்டுமே தொடங்கி பராமரிக்க வேண்டும்.. அதாவது தந்தை அல்லது தாய் தான் அதிகாரப்பூர்வ பாதுகாவலராக இருக்க வேண்டும்..

முன்னதாக சில குடும்பங்களில் தாத்தா அல்லது பாட்டி ஆர்வத்தின் காரணமாக பேத்திகளின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது உண்மைதான்.. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி அவர்கள் சட்டபூர்வ பாதுகாவலராக இல்லாவிட்டால், அந்த கணக்கை பெற்றோரின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது..

சுகன்யா சேமிப்பு திட்டம்

இதற்காக சம்பந்தப்பட்ட தபால் நிலையம் அல்லது வங்கி கிளைக்குச் சென்று தேவையான படிவங்களை நிரப்பி பாதுகாவலர் மாற்றத்தை செய்யலாம்..

இந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தால் கணக்கு விதிமுறைக்கு முரணானதாக கருதப்பட வாய்ப்பு உள்ளது.. இருப்பினும் பொதுவாக முதலில் ஆவண திருத்தத்திற்கு அவகாசம் வழங்கப்படும்.. சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் பரிவர்த்தனைகளில் தற்காலிக சிக்கல்கள் ஏற்படலாம்..

பான் விவரங்கள், ஆதார் கட்டாயம்

மேலும் சிறுசேமிப்பு திட்டங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஆதார் மற்றும் பான் விவரங்களை இணைப்பதும் அவசியமாக்கப்பட்டுள்ளது.. பாதுகாவலரின் ஆதார் எண் கட்டாயம்.. குழந்தைக்கு ஆதார் இருந்தால் அதையும் இணைக்க வேண்டும்.. பான் விவரங்கள் குறிப்பாக நிதி பரிவர்த்தனை மற்றும் வரி தொடர்பான தேவைகளுக்காக பயன்படுகின்றன..

ஆதார் மற்றும் பான் விவரங்களை இணைக்காத கணக்குகளில் அடுத்தடுத்த முதலீடுகளைச் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.. மேலும் முதிர்வுத் தொகையைப் பெறுவதிலும் அல்லது வட்டி வரவு வைப்பதிலும் தடைகள் உருவாகக் கூடும்.. நிதி மோசடிகளைத் தவிர்க்கவும் சரியான பயனாளிகளுக்கு அரசின் சலுகைகள் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த ஆவண இணைப்பு முறை தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது..

ஆவணங்கள் இணைப்பு

எனவே பெற்றோர் தங்கள் அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கின் KYC விவரங்கள் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்..

பெண் குழந்தையின் எதிர்கால நலனுக்காக தொடங்கப்படும் இந்த திட்டம் பாதுகாப்பாகவும் சீராகவும் தொடர வேண்டும் என்றால் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.. ஆவணங்கள் சரியாக இருந்தால் சேமிப்பும் வட்டியும் தடையின்றி கிடைக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+