Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டோம்.. ஜாமீன் கோர முடியாது.. செந்தில் பாலாஜி தரப்பை அதிரவைத்த ED

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை வழக்கை பொறுத்தவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது என்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பரபரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Senthil Balaji cannot seek bail as chargesheet has been filed: Enforcement Directorate

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது, "செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?

வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது . செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல்நிலைப்படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்கவே முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்வார். 3,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை.

Senthil Balaji cannot seek bail as chargesheet has been filed: Enforcement Directorate

அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது." என வாதங்களை முன்வைத்துள்ளார். இதற்கு பதில் வாதம் வைத்த அமலாக்கத்துறை, "வருமானவரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. முழுமையான விசாரணையில்தான் அது தெரியவரும். வேலை வேண்டும் என பணம் கொடுப்பவர்கள் வங்கி வாயிலாக பணம் கொடுக்கமாட்டார்கள்.

Senthil Balaji cannot seek bail as chargesheet has been filed: Enforcement Directorate

அமலாக்கத்துறை வழக்கை பொறுத்தவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகத்தான் உள்ளார். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். எனவே, அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் கிடையாது. அமலாக்கத்துறை வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் இருக்கிறார்கள்" என வாதம் முன்வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+