முடிஞ்சிடுச்சு.. செந்தில் பாலாஜி வெளியே வரவே முடியாது.. பெயில் கிடைக்காதாமே.. அடித்து சொல்லும் "தலை"
சென்னை: இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது அவரு பெயில் கிடைக்காது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர்.

5 நாட்கள் விசாரணை: இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். இதுவரை 5 நாட்கள் விசாரணை முடிந்துள்ளது. கடந்த 5 நாட்களாக அவரிடம் தீவிரமாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி தம்பி: இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது அவரு பெயில் கிடைக்காது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
பேட்டி: இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட போதே அதை செந்தில் பாலாஜி நேரடியாக சென்று எதிர்கொண்டு இருக்கலாம். அப்போதே விசாரணைக்கு ஆஜராகி இருந்தால் இந்த அளவிற்கு போய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணாமலையை எதிர்க்கிறோம், பாஜகவை எதிர்க்கிறோம் என்று தீவிர அரசியல் செய்யும் செந்தில் பாலாஜியை முடக்க பாஜக எது வேண்டுமானாலும் செய்யும். அவருக்கு பாஜக, அண்ணாமலை, அதிமுக என்று பல எதிரிகள் இருக்கிறார்கள். அப்படி இருக்க செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்ளாமல் உள்ளே இருப்பது அதிர்ச்சியை தருகிறது.
செந்தில் பாலாஜி இப்படி எதிரிகளை சம்பாதித்து என்ன செய்ய போகிறார். அவர் அமைச்சராக இருந்தவர். இப்போது பாருங்கள் சிறையில் எப்படி இருக்கிறார் என்று. அவரின் தோற்றத்தை பாருங்கள். இனி ஒவ்வொரு நொடியும் அவருக்கு திக் திக் என்றுதான் இருக்கும்.

எல்லாம் இருந்தும் அவர் அநாதை போல ஆகிவிட்டார். அந்த 5 நாள் மிக முக்கியம். அவர் இதில் என்ன சொல்லி இருப்பார் என்பது மிக முக்கியம். கண்டிப்பாக அவர் 50 சதவிகிதமாவது சொல்லி இருப்பார். கண்டிப்பாக முரண்டு பிடித்து இருக்க மாட்டார்.
அவரை சரண்டர் செய்த அதே நாளில் அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அப்படி என்றால் அமலாக்கத்துறை எவ்வளவு வேகமாக செயல்பட்டு இருக்கிறார்கள். பழைய வழக்கில்.. பழைய வேலைவாய்ப்பு வழக்கில் கூட இப்போது புதிதாக கட்டும் வீட்டை சேர்த்து உள்ளனர். அந்த அளவிற்கு அமலாக்கத்துறை வேகமாக இருக்கிறது.
அவர்கள் சார்ஜ் சீட் போட்டுவிட்டனர். இனி செந்தில் பாலாஜி பெயில் கேட்க முடியாது. பெயில் கிடைக்காது. 60 நாட்களுக்கு முன்பாக சார்ஜ் சீட் போட்டுவிட்டதால் அவருக்கு பெயில் கிடைக்காது. அசோக் வெளியே தலைமறைவாக இருப்பதால் அதை சொல்லியே பெயிலை மறுப்பார்கள். செந்தில் பாலாஜி தரப்பால் இனி எதுவுமே செய்ய முடியாது.
-
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications