Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டுனு ஸ்டாலினுக்கு பறந்த போன்.. அடுத்த நிமிஷமே பதறிய முதல்வர்..காலையிலயே கிறுகிறுத்த அமலாக்கத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாமீனுக்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.. இந்நிலையில், திடீரென நெஞ்சுவலி வந்து, மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்..
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் 4 மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருமுறையும் நீதிமன்ற காவல் முடிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போதெல்லாம், அவருக்கான காவல் நீட்டிக்கப்படுகிறதே தவிர, ஜாமீன் தர மறுக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலை: உடல் நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், செந்தில்பாலாஜிக்கு திடீரென இன்று அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவசரம் அவசரமாக தமிழக அரசின் ஸ்டான்லி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். ரத்த கொதிப்பும் அதிகமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

Senthil Balaji Health Condition and what did MK Stalin talk with DMK Minister Ma Subramanian

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவரது உடல்நலம் சீராகும் வரையில் ஸ்டான்லியில்தான் இருப்பார் என தெரிவிக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

நெஞ்சுவலி: விடியற்காலையில், நெஞ்சுவலி என்றதுமே முதல் ஃபோன் முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. விஷயத்தை கேட்டதுமே பதறித்துடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. புழல் சிறையில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஸ்டான்லி தான் என்பதால், அங்கு சேர்ப்பதற்காக, சிறை நிர்வாகத்துக்கு அரசு தரப்பில் இருந்தும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல, அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கும் விடியற்காலையிலேயே தகவல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஸ்டான்லி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் சரிபாருங்கள் என உத்தரவிட்டிருக்கிறார்.. செந்தில் பாலாஜி பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்த பிறகே நிம்மதியாக சட்டமன்றம் கிளம்பி சென்றாராம் ஸ்டாலின்.

அமலாக்கத்துறை: இந்த நிலையில், சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது அமலாக்கத்துறை.. அவரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லையாம் அமலாக்கத்துறை.

மாறாக, செந்தில்பாலாஜிக்கு என்னென்ன வசதிகள் தரப்படுகின்றன ? யார் யாரிடம் அவர் பேசுகிறார்? முதல்வருக்கு அவர் என்ன தகவல் அனுப்புகிறார். முதல்வர் தரப்பிலிருந்து அவருக்கு என்னென்ன தகவல் தரப்படுகிறது? அவரது உடல்நலம் எப்படி இருக்கிறது? என்பதையெல்லாம் ரகசியமாக அமலாக்கத்துறையினர் கண்காணித்தபடி தான் இருக்கிறார்களாம்.

சந்தேக கேள்விகள்: இப்படிப்பட்ட சூழலில், திடீரென செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவத்தை அமலாக்கத்துறை கொஞ்சமும் பார்க்கவில்லையாம். எதற்காக இந்த திடீர் அட்மிட்? என்ற சந்தேகக்கேள்வியும் எழுந்துள்ளதாம்.. இது தவிர, "ரெண்டு நாளைக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் சில மாற்றங்களை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் செய்தது இதற்காகத்தானா? " என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கருப்பு நிற உடை அணிந்திருந்த செந்தில் பாலாஜியால் நடக்கவே முடியவில்லை. அவரை வீல் சேரில் வைத்தே மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர். மற்றொருபுறம், காவிரி மருத்துவமனையில் அவருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட சிகிச்சை ரிப்போர்ட்டுகளும் ஸ்டான்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

செந்தில்பாலாஜிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நெஞ்சுவலிக்காக செந்தில்பாலாஜி அட்மிட் ஆகியிருப்பது, மிகுந்த பரபரப்பை திமுகவில் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், கூடுதல் "அலர்ட்" விழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+