நாயைப் படுக்க வச்சு.. இப்படியா பண்ணுவீங்க.. சரண்யாவைக் கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நாயை படுக்க வச்சு அதைக் கடித்துத் திண்பது போல நடித்துள்ளார் நடிகை சரண்யா துராடி.. இதைப் பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சீரியல்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த சரண்யா துரோடி புது சீரியல்கள் கைவசம் இல்லாததால் தற்போது நாயோடு கொஞ்சி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இதனை பார்த்ததும் நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகின்றனர் . அந்த நாயும் சரண்யாவை நக்கி விளையாடுகிறது.

சரண்யா துராடி
சரண்யா செய்தியாளராக அறிமுகமாகி தன்னுடைய தமிழ்பேசும் திறமையினாலும் அழகான உச்சரிப்பினாலும் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் வலம் வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலமாக கதாநாயகியாக சீரியலில் காலடி எடுத்து வைத்தார். இந்த சீரியலில் இவர் தைரியமிக்க துணிச்சலான பெண்ணாக நடித்து இருந்தாலும் இவருடைய க்யூட்டான நடிப்பையும் அழகான சேட்டைகளையும் ரசித்தனர்.

ஆயுத எழுத்து சீரியல்
ரசித்த ரசிகர்கள் இவர் மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என அதிகமாக எதிர்பார்த்து வந்தனர். ஆனால் முதல் சீரியல் திடீரென முடிக்கப்பட்டதும் அடுத்த சீரியலில் உடனே கமிட்டாகி விட்டார் .ஆயுத எழுத்து சீரியல் கலெக்டராக நடித்துக் கொண்டிருந்த இவர் பல பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை தன்னுடைய நடிப்பில் கொண்டு வந்திருந்தார் .

பாதியில் வந்தாலும் கலக்கல்
இந்த சீரியலில் இவருக்கு முன்பு வேறு நடிகை நடித்து இருந்தாலும் இவர் பாதியிலேயே நடிக்க ஆரம்பித்தாலும் இவருடைய நடிப்பை ரசிகர்கள் நன்றாக ரசித்து வந்தனர். ஆனால் இந்த சீரியலும் திடீரென முடிக்கப்பட்டு விட்டது .அதற்குப் பிறகு இவரை எந்த சீரியலும் காணாத ரசிகர்களுக்கு அடிக்கடி இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக தரிசனத்தைக் காட்டி வருகிறார்.

டப்ஸ்மாஷில் பிசி
சீரியல்கள் தன் கைவசம் இல்லாவிட்டாலும் டப்ஸ்மாஷ் வீடியோக்களில் கலக்கிகொண்டு இருக்கும் இவர் மாடலிங்கிலும் பின்னி பெடல் எடுத்து வருகிறார் .பல விளம்பரங்களுக்கு மாடலாக நடித்து கொண்டிருக்கும் இவர் ஃப்ரீ டைமில் அடிக்கடி போட்டோ சூட்டும் நடத்திக் கொண்டிருக்கிறார் .அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடவும் இவருடைய ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

ஆறுதல்
சீரியலில் காணாமல் தவித்து வந்த ரசிகர்களுக்கு நீங்கள் இந்த மாதிரி வீடியோஸ்கள் போட்டு வருவது கூட ஆறுதலாக இருந்து வருகிறது என கூறிவருகின்றனர். அடிக்கடி வீடியோ போடுங்க எனக் கூறி வருகின்றனர் .இவர் சில நேரங்களில் நகைச்சுவை வீடியோக்களையும் பதிவிட்டு வருவார் அதுவுமில்லாமல் சில நேரங்களில் அவருடைய காதலருடனும் அடிக்கடி போட்டோசூட்டை எடுத்து தள்ளுகிறார்.

வாழ்த்துகள்
அதைப் பார்த்து சிலர் வயிறு எரிந்தாலம் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இவர் ஆக்டிவாக இருந்து வருவதால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .இவருடைய ரசிகர்கள் இவரின் பெயரில் பலர் ஃபேன்ஸ் பேஜ்களையும் ஓபன் பண்ணி வைத்திருக்கிறார்கள் .அதில் இவருடைய போட்டோஸ்கள் அடிக்கடி பதிவிட்டு வருவார்கள் .தற்போது இவர் வெளியிட்ட வீடியோவில் தங்களுடைய ஐடியில் இருந்து போஸ்ட் போட்டு வருகிறார்கள் .

நாயுடன் கொஞ்சி விளையாட்டு
அதனால் சரண்யா துரோடி நாயுடன் கொஞ்சி வெளியிட்ட வீடியோககள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய பங்குகளுக்கு இதனை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஆனாலும் சில நெட்டிசன்கள் இவரை ஒரு நாயை கூட கொஞ்சம் விடாமல் கமெண்ட்களால் பாடாய் படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications