திருநங்கை கொலையில் அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’.. உடன் இருந்த தோழிகளே கொன்ற சம்பவம்! வெளிவந்த ஷாக் காரணம்!
சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அண்மையில் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதிர்ச்சி திருப்பம் நடந்துள்ளது. அவருடன் நன்கு பழகியே திருநங்கைகளே அவரை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தவர் சிமி என்கிற சாதனா (21). திருநங்கையான இவர், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி இரவு வீட்டை விட்டுச் சென்ற நிலையில், அப்போது முதல் அவரைக் காணவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சிமியின் பெற்றோர் அவரைத் தேடி வந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் சிமியைக் கண்டுபிடித்துத் தருமாறு பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சிமியின் தாயார் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி பகுதியில் முட்புதரில் அழுகிய நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சிமியின் பெற்றோரை வரவழைத்து அடையாளம் காட்டச் செய்தனர். அவர் சிமி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில் சிமி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, திருநங்கை சிமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சிமி உடல் கிடந்த பகுதியில் இருந்து நான்கு திருநங்கைகள் ஓடும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வந்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த அவர்களை போலீசார் விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருநங்கை சிமி உடன் அபர்ணா(27), ஆனந்தி (35), ரதி (36), அபி (32) ஆகிய நான்கு திருநங்கைகளுக்கும் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவர்களில் சிமியை மட்டும் சில வாடிக்கையாளர்கள் விரும்பி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சிமிக்கும் மற்ற திருநங்கைகளுக்கும் இடையே கேலி கிண்டல், வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
சம்பவம் நடந்த அன்றும் சிமி உடன் மற்ற 4 திருநங்கைகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மற்ற நால்வரும் சிமியை கொடூரமாக தாக்கி கொலை செய்து, முட்புதரில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தொழில் போட்டி காரணமாக சிமியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. நள்ளிரவில் பைக்கில் சென்றபோது கொடூரம்! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications