எஸ்.ஐ. வில்சன் படுகொலை- காஞ்சிபுரத்தில் சிக்கிய தீவிரவாதிகளின் கூட்டாளிகள்
Recommended Video
சென்னை: கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வில்சன் கொலையாளிகளான அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவின் உடுப்பியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.

இதனிடையே இந்த தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவிய பலரும் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம்கார்டுகளை சோதனை செய்ததன் அடிப்படையில் காஞ்சிபுரம் செல்போன் கடைகளில் போலீசார் ரெய்டு நடத்தினர்.
இதில் 6 பேரை சுற்றி வளைத்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே தீவிரவாதிகளுக்கு உதவியதாக பெங்களூரு, காஞ்சிபுரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த உசேன் ஷெரீப்பை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். இந்த ஒட்டுமொத்த நெட் ஒர்க்கையும் காஜா முகைதீன் என்ற தீவிரவாதி இயக்கி வந்துள்ளார்.
அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காஜாமுகைதீனை வெளிநாட்டில் இருந்து இயக்கி வரும் பயங்கரவாதி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications