வைரலாகும் சித்தார்தா மரணம்.. சமூக வலைதளங்களில் மக்கள் ஆதங்கம், வேதனை, கோபம்! #RIPSiddhartha
Recommended Video
சென்னை: காபி டே நிறுவனர் சித்தார்த்தா இரண்டாவது நாளாக டுவிட்டரில் டிரென்டாகி வருகிறார். #VGSiddhartha, #RIPSiddhartha, #CafeCoffeeDay ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரென்டாகியுள்ளன.
காபி டே உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா நேற்று முன் தினம் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் இன்று காலை நேத்ராவதி ஆற்று பாலத்துக்கு 5 கி.மீ. தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மரணம் குறித்து சமூகவலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
|
நடத்தப்பட வேண்டும்
சித்தார்த்தா எத்தகைய சூழலில் இருந்திருந்தால் அது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பார் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. வருமான வரித் துறையினர் நிச்சயம் அவரை துன்புறுத்தி இருப்பார்கள். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். சித்தார்த்தாவின் முடிவுக்கு பின்னால் யார் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
நேர்மை வேண்டாம்
இந்தியாவில் நீங்கள் எங்கிருந்தாலும் சரி, தயவு செய்து நேர்மையாக மட்டும் இருந்துவிடாதீர்கள். நேர்மையாக தொழில் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு சித்தார்த்தாவின் தற்கொலை முடிவுதான் உங்களுக்கும். நாட்டிற்கு விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள்தான் தேவைப்படுகின்றனர் என்றார் இந்த வலைஞர்.
|
தற்கொலை
தன்னால் வெற்றிகரமாக தொழிலை நடத்த முடியாமல் மிகவும் வெற்றி பெற்ற தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
வேலைவாய்ப்புகள்
கர்நாடகத்தின் காபியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர் விஜ சித்தார்த்தா. ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளார். காபியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் சித்தார்த்தாவின் முடிவை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.