அரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க பாடலாசிரியர் கோரிக்கை!
சென்னை: அரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். சாதிய வெறி நோயாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாடலாசிரியரும் பாடகருமான தெருக் குரல் அறிவு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாடலாசிரியரும் பாடகருமான தெருக் குரல் அறிவு என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக அரசே! அரக்கோணம் சோகனூர் சாதிவெறி #இரட்டைப் படுகொலைக்கு உடனே நீதி வேண்டும். சாதிய வெறி நோயாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சோகனூர் கிராமத்தில் நடந்த வன்முறைகளில் அர்ஜுன், சூர்யா ஆகிய இரு இளைஞர்கள் கவுதம நகர் பகுதியில் 10 பேர் அடங்கிய கும்பலால் கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இப்படுகொலைகள் நடைபெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழக அரசு தரவும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளார்கள்.