சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகத்துக்கு இப்போதாவது வழங்கப்பட்ட பத்மஶ்ரீ விருது- ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தின் தலைசிறந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, வில்லுப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போதாவது மத்திய அரசு பத்மஶ்ரீ விருதுகள் வழங்கியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நாட்டின் பத்ம விருதுகள் மிக உயரிய விருதுகளாகப் போற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

பத்மவிருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் பலர் இருந்தும், பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் ஏதோ காரணங்களால் அத்தகைய தகுதியாளர்கள் இடம்பெறாமல் போவது உண்டு. சில நேரங்களில் பத்ம விருதுகளை முன்வைத்து சர்ச்சைகளும் ஏற்படுவதும் வழக்கம்.
இந்த ஆண்டு பத்ம விருதுகளைப் பார்க்கும் போது ஓரளவு நிறைவை தரக்கூடியதாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை. திரை உலக ரசிகர்களை தன்வயப்படுத்தி வைத்திருந்த மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருதை அளித்து மத்திய அரசு சிறப்பித்திருக்கிறது.
அதேபோல நீண்டகாலமாக பத்ம விருதுகளுக்காக எதிர்பார்க்கப்பட்டவர்கள் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகமும். இவர்களுக்கு எல்லாம் எப்போது பத்ம விருதுகள் கிடைத்து சிறப்பிக்கப்படுவார்களோ என்கிற ஏக்கம் அவர்களது ரசிகர்களுக்கு இருந்து வந்தது.
இப்போது சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம ஶ்ரீ விருதுகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதன்மூலம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இவர்களது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது மத்திய அரசு.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications