திடீரென சத்தம்.. அலறிய பயணிகள்! காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
சென்னை: திருவொற்றியூர் அருகே சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் முதல் மைசூர் வரை தினசரி இயங்குகிறது காவேரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில். இந்த ரயில், நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. எண்ணூரைத் தாண்டி , திருவொற்றியூர் அருகே சென்றபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அலறியுள்ளனர். இந்த பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில், செண்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள், ரயிலை ஆய்வு செய்தனர்.
7 ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications