Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சௌமியா செண்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுமா? காஞ்சிபுரத்தில் ஆரம்பமான புதிய பயணம்!பெண்கள் ஓட்டுக்கு குறி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்" என்ற பெயரில், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி இன்று தன்னுடைய சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.. பெண்களின் 10 முக்கிய உரிமைகளை வலியுறுத்தும் இந்தப் பயணம், தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த சுற்றுப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் 108 நாட்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Kanchipuram Soumya Anbumani PMK

சௌமியா அன்புமணி

அதன் தொடர்ச்சியாகவே இப்போது பெண்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தி, சௌமியா அன்புமணி இந்த மகளிர் உரிமை பயணத்தை ஆரம்பிக்க போகிறார்.. காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று காலை 9.30 மணிக்கு இந்தப் பயணத்துக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த பயணத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரத்தில் சம வாய்ப்பு, மது மற்றும் போதைப்பொருளால் பாதிக்கப்படாமல் வாழும் உரிமை, வன்முறை இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில்பயிற்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், உணவு, வீடு, குடிநீர், சுகாதாரம், மருத்துவ சேவை, சமூக பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 முக்கிய உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என பாமக தரப்பு தெரிவித்துள்ளது.

களத்தில் குதித்த சௌமியா

பாமகவை பொறுத்தவரை, உள்கட்சி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. ஆனாலும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக தொடர அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அன்புமணி தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து இப்போது சௌமியா அன்புமணியும் களத்தில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிட்ட போது, பெண்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.. பாமகவுக்கு இது பிளஸ்ஸாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

பாமகவுக்கு பெண்கள் ஓட்டு

இதன் காரணமாகவே, தமிழகம் முழுவதும் பெண்களை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது.. இதற்கு அன்புமணியும் ஓகே சொன்னதையடுத்து, இந்த மகளிர் உரிமை மீட்புப் பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கு "சிங்கப்பெண்ணே எழுந்து வா" என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்து பேசவும், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தப் பயணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்டிமென்ட் - காஞ்சிபுரம்

ஆன்மீக நகரமான காஞ்சிபுரத்திலிருந்து இந்த பயணத்தை தொடங்குவது ஒரு நல்ல சென்டிமெண்ட் என்று பாமக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.. இன்று பயணம் தொடங்குவதற்கு முன்பு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின்னரே சௌமியா அன்புமணி தனது பயணத்தை தொடங்க போவதாகவும் கூறப்பட்டது.

உலகிலேயே பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம் என்று பாமக தரப்பு கூறினாலும், நடைமுறையில் அவர்களுக்குரிய உரிமைகளும் மரியாதையும் முழுமையாக கிடைப்பதில்லை என்ற கருத்தை இந்தப் பயணம் முன்வைக்கிறது.

இந்தப் பயணத்தின் மூலம், பாமக பெண்களின் வாக்குகளைத் திரட்டுவதில் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது தெளிவாகிறது. இது தமிழக அரசியலில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதுடன், பாமகவுக்கும் வலு சேர்க்கும் என்றே நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+