நானே கேட்கும் அளவுக்கு அடிமையாகிட்டேன்.. 10 லட்சம் பாக்கி தொகையினால்.. ஸ்ரீகாந்த் வாக்குமூலம்
சென்னை: நானே கொகைன் போதைப் பொருள் கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர் பிரசாத் எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டியது இருந்தது என்றும், இதற்கு அவர் 3 முறை போதைப்பொருள் தந்தனர் என்றும், 4 வது நானே போதைப்பொருள் கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் சனிக்கிழமை 3 மணியளவில் தான் துபாயில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அன்று இரவு அவர் பார்ட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். அப்போது தான் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை இந்த பார்ட்டி நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே அவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்ததும் தெரியவந்தது.
போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ள பிரசாத் என்பவர் தான் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கி இருக்கிறார். குறிப்பாக 250 கிராம் கொகைன் போதைப்பொருள் வழங்கியிருக்கிறார். பிரசாத் தயாரிக்கும் தீக்கிரை படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்து வந்தார். இதில் சம்பள பாக்கி ரூ.10 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை கேட்டு செல்லும் போதெல்லாம் கொக்கைன் என்ற போதைப்பொருளை பிரதீப்பிடம் இருந்து வாங்கி ஸ்ரீகாந்துக்கு கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
போலீசாரிடம் வாக்குமூலமாக கூறுகையில், எனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு சென்றபோது எல்லாம் எனக்கு கொகைன் போதைப்பொருள் கொடுத்தனர். 3 முறை நான் கேட்டு சென்றபோதும் எனக்கு போதைப்பொருள் கொடுத்தனர். 4 வது முறை நானே கேட்கும் அளவுக்கு போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டேன். நான் செய்தது தவறு. என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications