அழிவுகாலம் நெருங்கிடுச்சோ.. தென் கொரியாவிலிருந்து ஷாக் நியூஸ்! ஜப்பான் அணு உலையால் வந்த பிரச்சனை?
சென்னை: ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை விபத்தின் தாக்கத்தை குறைக்க பயன்படுத்த கதிர் வீச்சு நீரை கடலில் கலந்துவிட அந்நாட்டு அரசு முடிவு செய்து இருப்பதால், தென் கொரிய மக்கள் உப்பையும், மீனையும் பதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த புகுஷிமா அணு உலை விபத்தை யாராலும் எளிதில் மறக்க முடியாது. 12 ஆண்டுகள் கழித்தும் அதன் தாக்கம் ஜப்பானிலும் அண்டை நாடான தென்கொரியாவில் இருப்பதாக கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன்.

இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "பொதுவாக மக்கள் தங்கம், வைரம் போன்றவற்றை பதுக்கி வைப்பதை பற்றி கேள்விப் பட்டுள்ளோம், சில நேரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் போது உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை கேட்டுள்ளோம், ஆனால் தென் கொரிய மக்கள் உப்பை பதுக்கி வைக்கிறார்கள்.
உப்பை ஏன் பதுக்கவேண்டும் என்கிற கேள்வி எழுவது நியாயம்தான். கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமாவில் ஏற்பட்ட அணுவுலை விபத்தின் தாக்கத்தை குறைக்க பல கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரில் எந்த தொழில்நுட்பத்தாலும் கழிக்கமுடியாத "ட்ரிட்டியம்" உள்ளது.
12 ஆண்டுகளுக்கு மேலாக "கதிர்வீச்சு நீர்" வளாகத்தின் உள்ளையே சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் தண்ணீரை வைக்க முடியாத காரணத்தால் பசிபிக் பெருங்கடலில் இந்த தண்ணீரை கலந்துவிடுவது என ஜப்பான் அரசு கொடுத்த அறிக்கையை சர்வதேச அணுசக்தி முகமையம் ஏற்றுக் கொண்டு, "கடலில் கலப்பதற்கு மட்டுமே அனுமதி, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல"

என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் அறிவித்துவிட்டது. கதிர்வீச்சு கொண்ட நீர் கடலில் கலக்கும் போது அங்கிருந்து உற்பத்தியாகும் உப்பிலும் கதிர்வீச்சு கலந்துவிடும் என்பதால் உப்பையும் மீனையும் தென்கொரிய மக்கள் பதுக்க ஆரம்பித்து உள்ளனர். விபத்து நடந்து 13 ஆண்டுகள் கடந்திருந்தாலும் கதிர்வீச்சு அபாயம் இன்னும் விலகவில்லை என்பது தெளிவாகிறது.
"உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா என்று கேட்ட காலம் போயி, இப்ப உங்க உப்புல கதிர்வீச்சு இருக்கா"? என்று கேட்கும் காலத்திற்கு வந்ததுதான் அணு உலைகள் செய்த சாதனை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications