கொரோனா மத்தியில் குளுகுளு செய்தி.. மே 16-இல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
சென்னை: மே 16-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே அதிலும் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.நெல்லையில் தற்போது மழை பெய்து வருகிறது. விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.

அந்த வகையில் இன்று 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 2 தினங்களில் காலை 11.30 முதல் பிற்பகல் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகபட்சமாக குமரி மாவட்டத்தில் புத்தன் அணைப் பகுதிகயில் 4 செ.மீ. மழையும் சுரளக்கோட்டில் 3 செ.மீ. மழையும் பதிவானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீர்த்தகண்டனம், வட்டானம் உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவை ஒட்டியுள்ள கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மே 16-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. அதற்கான சாதகமான சூழல் அமைந்துள்ளது. அந்தமான் பகுதிகளில் 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications