தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாதத்தில் 24% குறைவு - 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு
ஆகஸ்ட் மாதத்தில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் இயல்பை விட 24 சதவிகிதம் குறைவான அளவு மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான மழை அளவாகும்.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரைக்கும் தென்மேற்குப் பருவமழை காலமாகும். கேரளாவில் ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. வட மாநிலங்களில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்தது. வட இந்திய மாநிலங்களில் பல நாட்களில் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு பெருமழையும் ஆறுகளில் பெருவெள்ளமும் ஏற்பட்டது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் மழை அளவு சராசரியை கணக்கிடும் போது ஆகஸ்ட் மாதத்தில் மழை இயல்பை விட 24 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான குறைவான மழை அளவு என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடமேற்கு, மத்திய மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 9 முதல் 16 வரையும் மற்றும் ஆகஸ்ட் 23 முதல் 27 வரையிலும் மழை அளவு குறைவாக பதிவாகியுள்ளது. முன்பு வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 2021 பற்றாக்குறை கடந்த 19 ஆண்டுகளில், 2002 முதல் மிகக் குறைவு என்று கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை நீடிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பாக இருக்கும் என்று ஐஎம்டி கணித்திருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, ஜூன் மாதம் 10 சதவிகிதம் அதிக மழைப்பொழிவை பதிவு செய்தது. அதே நேரத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டும் முறையே 7 மற்றும் 24 சதவிகிதம் பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், கோவா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா அடங்கிய மத்திய இந்தியப் பகுதிகளில் 39 சதவிகிதம் குறைவான அளவு மழை பொழிவைப் பெற்றுள்ளது. வட இந்திய மாநிலங்களை உள்ளடக்கிய வடமேற்கு இந்தியா பிரிவில் உள்ள பற்றாக்குறை 30 சதவிகிதமாக இருந்தது.
தெற்குப் பகுதியில் 10 சதவிகிதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இயல்பை விட இரண்டு சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மழை பொழிவு 24 சதவிகிதம் குறைவாக பதிவாகி உள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக மழை பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் வாரந்தோறும் பருவமழை மாறுபாட்டின் அடிப்படையில் வாரந்தோறும் பருவமழை மாறுபாட்டைக் காட்டுகிறது. நாடு முழுவதும் வாராந்திர ஒட்டுமொத்த மழைப்பொழிவு முறையே 35 சதவிகிதம், 36 சதவிகிதம் மற்றும் 21 சதவிகிதம், அதன் எல்பிஏ க்கு கீழே பதிவாகியுள்ளது
குறைந்த எண்ணிக்கையிலான குறைந்த அழுத்த அமைப்புகள் (LPS) உருவாக்கம் மற்றும் அவற்றின் குறைவான நாட்கள் ஆகஸ்ட் மாதத்தில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் காலநிலை மற்றும் அவற்றின் நீண்ட மேற்கு அசைவுகள் இல்லாததால் மத்திய இந்தியாவிலும் இந்தியா முழுவதிலும் குறைவான மழை பதிவாகியுள்ளது.
வெப்பமண்டல இந்தியப் பெருங்கடல் மீது எதிர்மறையான இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD), இந்திய பருவமழைக்கு சாதகமற்றதாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் நிலவியது, இது மாதத்தில் இந்தியா முழுவதும் மழைப்பொழிவு குறைய காரணமாக இருந்தது. எதிர்மறையான இந்தியப் பெருங்கடல் இருமுனை இந்து மகா சமுத்திரத்தின் நீரை சூடாக்குவதோடு தொடர்புடையது.
நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்தாண்டு சராசரி அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் நீண்ட கால சராசரியில் (LPA) 96 முதல் 104 சதவீதம் இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் கடந்த ஜூன் மாதம் கணித்திருந்தது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை அளவு நீண்ட கால சராசரி அளவில் 101 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது. கடந்த 1961ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை நீண்டகால சராசரி மழை அளவு 88 சென்டி மீட்டராக இருந்துள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications