தைப்பூசத்தை ஒட்டி மேல்மருவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை: இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. பெண்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் கோயிலாக இந்தக் கோயில் உள்ளது. பெரும்பலான கோயில்களில் பெண்கள் கருவறைக்குள் நுழைய முடியாது அல்லது கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இங்கு பெண்கள் மூலவர் கருவறைக்குள் நேரடியாகச் சென்று வழிபடலாம்.

பெண்கள் தாமே விக்ரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். இந்த கோயிலில் தைப்பூசம், யுகாதி, தமிழ் புத்தாண்டு, சித்திரை பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மார்ச் 3 அடிகளாரின் பிறந்தநாள் ஆகியவை முக்கிய விழாக்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவார்கள். எனவே மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜனவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை லோக்மான்ய திலக் டெர்மினஸ் - காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11017), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12635), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12637), ஜனவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01ஆம் தேதி வரை கன்னியாகுமரி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12641), ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 29-ந்தேதி வரை மதுரை ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12651) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16179), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை கன்னியாகுமரி - பனாரஸ் செல்லும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16367), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16865), டிசம்பர் 31 ஆம் தேதி 2025 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ஜோத்பூர் -திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20481). ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ராமேசுவரம் - பிரோஸ்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20497) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை செங்கோட்டை சென்னை எழும்பூர் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20682), டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வரை செங்கோட்டை- தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20684), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை தாம்பரம் -நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20691), ஜனவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரை புவனேஸ்வர் ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20849), ஜனவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை புவனேஸ்வர் புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20851) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22101), டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை புதுச்சேரி - புதுடெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22403), டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை ராமேசுவரம் -பனாரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22535), டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01ஆம் தேதி வரை ராமேஸ்வரம் - அயோத்தி கான்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22613), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22623) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை மதுரை பிகானேர் அனுவ்ரத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22631), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை தாம்பரம் நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22657). ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை ஜோத்பூர் மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22673), ஜனவரி 1ஆம் தேதி முதல் பிபரவரி 2 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22153), மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications