உணவு இடைவேளை எல்லாம் ஸ்கூல்ல தான் விடுவாங்க! இங்க அது மாதிரி கிடையாது! சபாநாயகர் அப்பாவு!
சென்னை: உணவு இடைவேளை எல்லாம் பள்ளியில் தான் விடுவார்களே தவிர அது போல சட்டசபை கூட்டத் தொடரின் போது விட முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் இருக்கிறார்களே என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் வயது முதிர்ந்ததாக நீங்களாகவே கருதிக்கொள்ள வேண்டாம் எனவும் கூறினார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்தப் பேச்சால் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சிரிப்பலை எழுந்தது.

அலுவல் ஆய்வுக் கூட்டம்
தமிழக சட்டசபை ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அப்போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், சட்டசபை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும் கடந்த முறை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை போல் இந்த முறையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனக் கூறினார்.

நேரடி ஒளிபரப்பு
மேலும் சட்டமன்றக் கூட்டத்தை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய அவர் 19 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டாரா என்பதை நிருபர்கள் தான் அவரிடம் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இட நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய சட்டமன்றத்துக்கு மாறுவது தொடர்பாக அமைச்சரவை தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர நீங்களும், நானும் அல்ல என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உணவு இடைவேளை
அதேபோல், உணவு இடைவேளை எல்லாம் பள்ளியில் தான் விடுவார்களே தவிர அது போல சட்டசபை கூட்டத் தொடரின் போது விட முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வயது முதிர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் இருக்கிறார்களே என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் வயது முதிர்ந்ததாக நீங்களாகவே கருதிக்கொள்ள வேண்டாம் எனவும் கூறினார்.

சிரிப்பலை
செய்தியாளர்கள் எழுப்பிய கடினமான கேள்விகளுக்கு கூட தனக்கே உரிய பாணியில் டைமிங்காக பேசி பேட்டியளித்த இடத்தையே கலகலப்பாக்கினார். முன்னதாக அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications