இன்று ஆடிப் பெருக்கு.. சொத்துக்கள் பதிய பத்திர ஆபிஸ் போறீங்களா.. பதிவுத்துறை சூப்பர் வசதி
சென்னை: ஆடிப் பெருக்கு பண்டிகையான இன்று பத்திரங்கள் பதிவதை மக்கள் விரும்புவார்கள். எனவே அவர்களின் வசதிக்காக பொது விடுமுறை நாளான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி, ஆகஸ்ட் 3-ம் தேதியான இன்று (சனிக்கிழமை) பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார்.

இதுபற்றி வியாழக்கிழமை அன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், " பொதுமக்கள் அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகின்றனர். எனவே, பொது விடுமுறை நாளான ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆவணப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமை (இன்று) காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். இது தொடர்பாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
ஆடிப்பெருக்கு நாளன்று அதிகளவிலான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம் என்பதால் அன்றைய தினம் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தைவிட அதிக பதிவுகள் நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கடந்த 18 நாளில் இன்று தான் பத்திரங்கள் பதிவதை விரும்புவார்கள் என்பதால் பத்தர அலுவலகங்களில் இன்று கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும்.
சொத்துக்கள் வாங்கும் மக்கள் அதை எப்போதுமே சுபமுகூர்த்த நாளில் தங்கள் பெயரில் மாற்றுவதை விரும்புகிறார்கள். அவர்களின் வசதிக்காகவே, ஆடிப்பெருக்கு, தைப்பூசம், சுபமூகூர்த்த தினங்கள் உள்பட பல்வேறு விஷேச நாட்கள், சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட எந்த விடுமுறை தினத்தில் வந்தாலும் பத்திர அலுவலகங்கள் இயங்குகிறது. அன்று பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு கட்டணமும் அரசு வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications