எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம்... முதல்வர் வெளியிட்டார்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சரோஜா, கருப்பண்ணன், சம்பத், மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் நாணயங்களை வெளியிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications