ரேஷன் அட்டையில் மாற்றம் செய்யணுமா? சூப்பர் சான்ஸ்! ஒரே நாளில் வேலை முடிஞ்சிரும்.. வெளியான அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. சென்னை முழுக்க வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு தரப்பிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன.

Special Grievance Camp for Ration Card Holders in Chennai on February 8

அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை பெற ரேஷன் அட்டை முக்கியமான ஆவணம் ஆகும். இலவச அரிசி, மானிய விலையில் பொருட்கள், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு போன்றவற்றை பெறுவதற்கும் ரேஷன் குடும்ப அட்டை மிக முக்கியமான ஒன்று. தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் 35,083 மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2.25 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன.

இந்நிலையில், குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதனை, மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி 2025 பிப்ரவரி மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 08.02.2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+