ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக ஸ்ரீதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சியுடன் இந்திய குடியரசு கட்சியும், வளரும் தமிழகம் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்களை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக எம் சிவக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார்.
பெரும் தலைகள் களமிறங்கும் கரூர் தொகுதி.. அப்படி என்ன சிறப்பம்சம் தெரியுமா?
இந்த நிலையில் எம் சிவக்குமாருக்கு பதில் ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதிக்கு எம் ஸ்ரீதர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரையின் பேரில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார்.