இறுக்கி அணைத்தார்.. தனியாக அவர் அறைக்கு வருமாறு டார்ச்சர் செய்தார்.. அர்ஜூன் மீது ஸ்ருதி பரபர புகார்
Recommended Video

சென்னை: நிபுணன் படத்தில் நடித்தபோது காதல் காட்சிகளில் என்னை இறுக்கி அணைத்தார் என்றும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அறைக்கு வருமாறு எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்று அர்ஜூன் மீது ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்துள்ளார்.
மீ டூ ஹேஷ்டேக் மூலம் பல்வேறு பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. இதில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரனும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மீது புகார் கூறியுள்ளார்.
[அடுத்த டார்கெட் தியாகராஜன்.. நடுராத்திரி என் ரூம் கதவை தட்டினார்.. இளம்பெண் பகீர்]

டேக் வாங்குவது
அதில் அவர் கூறுகையில் நிபுணன் படப்பிடிப்பின் போது தன்னிடம் அர்ஜூன் மோசமாக நடந்து கொண்டார். காதல் காட்சிகளில் இறுக்கமாக கட்டிப்பிடிப்பது, மீண்டும் மீண்டும் டேக் வாங்குவதும் என்றிருந்தார்.

செக்ஸ் டார்ச்சர்
அதுவும் 50 பேர் இருந்தபோது அவர் இதுபோல் நடந்து கொண்டார். நான் ஒன்றும் செய்யவில்லை. அவரிடம் இருந்து விலகியே இருந்தேன். நான் திடீரென படத்தை பாதியில் விட்டுவிட்டு சென்றால் அது தயாரிப்பாளர்களை கடுமையாக பாதிக்கும். எனவே அர்ஜூனின் செக்ஸ் டார்ச்சரை நான் பொறுத்துக் கொண்டேன்.

செல்லவில்லை
என்னை அவருடைய அறைக்கு வருமாறு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார். அதிலும் விருந்துக்கு செல்லலாமா என்றே இரட்டை அர்த்தத்தில் என்னை அழைப்பார். நான் அவருடைய அறைக்கு செல்லவில்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் கேள்வி கணைகள்
இவரது கருத்தை சிலர் ஆதரிக்கின்றனர். இன்னும் சிலரோ ஒரு பெரிய நடிகரின் பெயரை கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் கெடுக்காதீர் என்று கூறுகின்றனர். மேலும் தைரியமான பெண்ணான ஸ்ருதி இத்தனை நாட்கள் ஏன் இதை மறைத்தார். அர்ஜூனின் முதல் டார்ச்சரிலேயே அவரை அறைய வேண்டியது தானே என்றும் சிலர் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications