Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்எஸ்எல்சி ரிசல்ட்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் டாப் 3..பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர், சிவகங்கை,விருதுநகர் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.

SSLC Result: Perambalur, Sivagangai, Virudhunagar Top 3 in Class TN 10 Public Examination

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் 89.77% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் சிறைவாசிகள் 42.42% பேரும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 87.45% சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 92.24% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.67 சதவீதத்துடன் மாவட்டம் முதலிடத்தில் உள்ளநிலையில் , 97.53 சதவிகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்திலும் , 96.22% விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. கன்னியாகுமரி 4வது இடத்தையும் தூத்துக்குடி கல்வி மாவட்டம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+