சோனியா, ராகுல், நாயுடு வந்திருக்காங்க.. தலைவரே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்- ஸ்டாலின் உருக்கம்
சென்னை: சோனியா, ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் வந்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் என ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
இந்த விழாவில் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் அண்ணா அறிவாலயத்துக்கு வரும் போது கருணாநிதி அங்கு இருக்கிறார். அவர் இன்றைக்கு அணு அளவும் தொடர்ந்து இயக்கி கொண்டிருக்கிறார். அவர் மறையவில்லை. அவர் மறையவே இல்லை என்ற உணர்வுதான் என் உயிரிலே ஓடிக் கொண்டிருக்கிறது.

அன்பழகனை
எங்கோ மறைந்து நின்று இன்றைக்கு நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் என் உள்ளத்தில் தோன்றியிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களே எங்கே போய்விட்டீர்கள். எனக்கு அக்காள்கள்தான் உண்டு. அண்ணன்கள் இல்லை. ஆனால் அண்ணனாக நான் கருதுவது பேராசிரியர் அன்பழகனைத்தான் அண்ணனாக கருதுகிறேன் என்பீர்கள்.

சோனியா காந்தி
மூச்சுக்கு முன்னூறு முறை பேராசிரியர் பேராசிரியர் என்பீர்களே. அந்த பேராசிரியர் முன்னிலையில்தான் உங்கள் சிலை திறப்பு விழா நடந்துள்ளது. நீங்கள் எங்கே போய் விட்டீர்கள். உங்களால் சொக்கத்தங்கம் என வர்ணிக்கப்பட்ட சோனியா காந்தி மேடையில் இருக்கிறார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்.

ஆந்திர முதல்வர்
போராட்டம் குணம் படைத்தவர் என வாழ்த்திய ராகுல் வந்திருக்கிறார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள். 1999-ஆம் ஆண்டுகளில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்திருந்த காலகட்டத்தில் பல்வேறு சிக்கலான நேரங்களில் நல்லெண்ணத்தோடு உங்களோடு இருந்து செயல்பட்ட ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்திருக்கிறார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்.

எங்கே தலைவர்
உங்களுடைய சமூகநீதிக் கனவுகளை, கொள்கைகளை கேரளாவில் அமல்படுத்தி வரும் பினராயி விஜயன் அமர்ந்திருக்கிறார். நீங்கள் எங்கே போய்வீட்டீர்கள். பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் உங்களுடைய ஆலோசனைகளை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து புதுவை மாநில முதல்வராக இருக்கும் நாராயணசாமி அமர்ந்திருக்கிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். நீங்கள் எங்கும் போக வில்லை. போகவும் மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் சிம்மசனம் போட்டு இருக்கிறீர்கள்.
-
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications