ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை பெற ரெடியா? இந்தியாவில் நடக்கும் மாற்றம்! அதிரடியில் எலான் மஸ்க்
சென்னை: இந்தியாவில், ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை கொண்டு வர எலான் மஸ்க் தீவிரமாக முயன்று வருகிறார். இந்நிலையில் இதை சாத்தியப்படுத்த முதற்கட்டமாக 9 கேட்வே நிலையங்களை நிறுவன மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.
மும்பை, நொய்டா, சண்டிகர், கொல்கத்தா, லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் இந்த நிலையங்கள் அமைய உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் இன்டர்நெட் சேவையை வழங்கும் பணியை ஸ்டார்லிங்க் தொடங்க இருக்கிறது.

கேட்வே நிலையங்கள் ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கு மிக முக்கியமாகும். இவை பூமியில் அமைக்கப்படும் பெரிய ஆன்டெனா நிலையங்கள் ஆகும். விண்வெளியில் உள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் இருந்து வரும் இணைய சிக்னல்களைப் பெற்று, அதைத் தரைக் கட்டுப்பாட்டு மையங்கள் வழியாகப் பிராட்பேண்ட் நெட்வொர்க்குடன் இணைக்கும் பணியை இவை செய்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இந்த நிலையங்கள்தான் விண்வெளிக்கும் பூமிக்கும் இடையேயான இணைய இணைப்பை ஏற்படுத்தும் மையங்களாக செயல்படுகின்றன.
ஒரு கேட்வே நிலையத்தால் சுமார் 200,000 சதுர கி.மீ பரப்பளவுக்கு இணைய சேவையை கொடுக்க முடியும். அமெரிக்காவில் மட்டும் சுமார் 100 கேட்வே நிலையங்களை மஸ்க் நிறுவி இருக்கிறார். அப்படியெனில் இந்தியாவில் குறைந்தது 80 நிலையங்களாவது தேவைப்படும்.
தற்போது மத்திய அரசு, ஸ்டார்லிங்கிற்கு முழுமையான வணிகச் சேவைக்கான அலைக்கற்றையை உடனடியாக வழங்காமல், முதலில் அதன் சேவையின் பாதுகாப்பு அம்சங்களையும், தொழில்நுட்ப சமாச்சாரங்களையும் சரிபார்ப்பதற்காக தற்காலிகமாக மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அதன் அனைத்துப் பயனர்களுக்கும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 600 ஜிகாபிட்ஸ்/வினாடி இணையத் தரவுத் திறனை வழங்க ஸ்டார்லிங் திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிக அதிக திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இவ்வளவு பெரிய திறனைக் கையாளுவதற்கு, இந்தியாவில் பல கேட்வே நிலையங்கள் தேவைப்படும்.
ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் நெட்வொர்க் வழியாக இந்தியத் தரவுகள் கடத்தப்படுவது, தவறாகப் பயன்படுத்தப்படுவது, அல்லது தரவுகளை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற செயல்களைத் தடுக்க, இந்திய அரசின் அனைத்துப் பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இணங்குகிறதா என்பதை நிரூபிக்க வேண்டும். இந்தத் தற்காலிக ஒதுக்கீடு என்பது சோதனை காலத்திற்கு மட்டுமே. சோதனை வெற்றிகரமாக முடிந்து, பாதுகாப்பு அமைப்புகள் இறுதி ஒப்புதல் அளித்த பின்னரே ஸ்டார்லிங்கிற்கு வணிக ரீதியாகச் செயல்படவும், நிரந்தர அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications