ஸ்டெர்லைட்டால் மட்டுமே தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபடவில்லை.. மத்திய அரசு வக்காலத்து
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபடவில்லை என்று மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை, என்று மத்திய நீர்வளத்துறை, தன்னிச்சையாகத் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தடி நீர் வாரியத்தின் மூலம் ஒரு நிலத்தடி நீர் ஆய்வினை நடத்தி அறிக்கை வெளியிட்டது.

தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இப்படி ஒரு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை நடத்தியுள்ளது, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நடவடிக்கை என்று, தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று மத்திய நீர் வளத்துறை தனது அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மத்திய அரசு உரிய முறையில் தான் ஆய்வு செய்துள்ளது. மாநில அரசுக்குத் தெரிவித்து விட்டுதான், மத்திய அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நிலத்தடி நீர் வாரியம் ஏற்கனவே அளித்த அறிக்கை சரியானதுதான்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்ததே தவறுதான். உச்சநீதிமன்றத்திற்கு தான் தமிழக அரசு சென்றிருக்க வேண்டும். எங்களது அறிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் தமிழக அரசின் உரிமை. அதில் நாங்கள் தலையிடப்போவதில்லை. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்கு நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications