ஸ்டெர்லைட்டால் மட்டுமே தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபடவில்லை.. மத்திய அரசு வக்காலத்து
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபடவில்லை என்று மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை, என்று மத்திய நீர்வளத்துறை, தன்னிச்சையாகத் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தடி நீர் வாரியத்தின் மூலம் ஒரு நிலத்தடி நீர் ஆய்வினை நடத்தி அறிக்கை வெளியிட்டது.

தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இப்படி ஒரு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை நடத்தியுள்ளது, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நடவடிக்கை என்று, தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று மத்திய நீர் வளத்துறை தனது அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மத்திய அரசு உரிய முறையில் தான் ஆய்வு செய்துள்ளது. மாநில அரசுக்குத் தெரிவித்து விட்டுதான், மத்திய அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நிலத்தடி நீர் வாரியம் ஏற்கனவே அளித்த அறிக்கை சரியானதுதான்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்ததே தவறுதான். உச்சநீதிமன்றத்திற்கு தான் தமிழக அரசு சென்றிருக்க வேண்டும். எங்களது அறிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் தமிழக அரசின் உரிமை. அதில் நாங்கள் தலையிடப்போவதில்லை. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்கு நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications