தொழில்முனைவோரெல்லாம் அதிர்ச்சியா இருக்காங்களாம்.. அப்பீல் போகப் போகுதாம் ஸ்டெர்லைட்!
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தொழில் முனைவோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வோம் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடியில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்திய போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கடந்த 2018 மே 22 ஆம் தேதி பலியாகிவிட்டனர்.

இதையடுத்து மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றமோ, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
அதன்படி வேதாந்தா நிறுவனம் ஆலையை திறக்க அனுமதி கோரி கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று கூறி வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் கூறுகையில் ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வோம். இந்த தீர்ப்பால் தொழில் முனைவோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்றார் பங்கஜ் குமார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications