மனசை உலுக்குது.. காசாவுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: காசாவில் நடந்த இனப்படுகொலை மனதை உலுக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் 26 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்களும், திமுக கூட்டணி தொண்டர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு கொடியுடன் கலந்துகொண்டர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அப்போது காசா இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஸ்டாலின் பேசியதாவது:- காசாவில் நடந்த இனப்படுகொலை மனதை உலுக்குகிறது. உடனே இதை நிறுத்த வேண்டும். பாலஸ்தீனத்தில் 26 ஆயிரம் குழந்தைகள் அவர்களது பெற்றோரை இழந்துள்ளனர்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காசாவில் இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலை கண்டித்தும், உடனே போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும். என்றார்.
-
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications