ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும்.. பொள்ளாச்சி வழக்கில் கடும் நடவடிக்கை... உதயநிதி உறுதி
சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள புதுப்பேட்டையில் பொது மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

ஸ்டாலினுடைய வெற்றி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "இங்கு எனக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. எனது வெற்றிக்காகத் தேர்தல் பணிகளைச் செய்த தொண்டர்களுக்கும் நன்றி. இந்த வெற்றி என்பது கருணாநிதிக்கான வெற்றி, தலைவர் ஸ்டாலினுடைய வெற்றி.

அடுத்து அமைச்சர்?
இங்கு தொகுதி மக்கள் என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். வரும் 7ஆம் தேதி முதல் தொகுதிகளுக்குத் தேவையானதைச் செய்யத் தொடங்கிவிடுவேன். அதை நீங்களே பார்ப்பீர்கள்" என்றார். மேலும், ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா என்று கேட்ட கேள்விக்கு, வரும் 7ஆம் இதற்கான பதில் கிடைத்துவிடும் பொறுத்திருங்கள் எனச் சூசகமாகப் பதிலளித்தார்.

பொள்ளாச்சி வழக்கு
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். பொள்ளாச்சியில் பல பெண்களிடம் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரி ராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணை
மேலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கிலும் 'பார்' நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு வழக்குகளை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். பின்னர், இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications