அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த திங்கட்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவது, மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு உள்ளிட்ட காரணங்களால் கலை-அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்-மாணவிகளிடம் அதிகரித்துள்ளது. பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில், கலை-அறிவியல் படித்தால் எம்.பி.ஏ. உள்ளிட்ட உயர்நிலை படிப்புகளை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு பெறும் நிலை உள்ளது
இதனால் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.இளநிலை படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபி, மலையாளம், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட மொழிப்பிரிவுகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதே போல கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளுக்கும் சராசரியாக விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுச் செல்கின்றனர். இருக்கின்ற 13 துறைகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பிகாம் மற்றும் பிஏ புரொபஷனல் அக்கவுண்டிங் படிப்புகளுக்கு அதிக போட்டி நிலவுவதாக கல்லூரி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பிகாம் மற்றும் பிஏ பயிலும் போதே, சிஏ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் இப்பிரிவில் சேர மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 21 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகள் அனைத்திலும் விண்ணப்ப விநியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை போலவே அறிவியல், கலை சார்ந்த படிப்புகளிலும் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications