பொறியியல் கல்வி படிக்க மாணவர்கள் ஆர்வம்..கலந்தாய்வு எப்போது..அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்
சென்னை: பொறியியல் படிப்பதற்காக இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 18,610 விண்ணப்பங்கள் கூடுதலாக வரப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழ்நாட்டில் தொடங்கும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் முடிந்து ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது, அதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,510 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர் என்றார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பொறியியல் படிப்பிற்காக தொழிற்சாலைகளுடன் இணைந்து பாடத்திட்டங்களை மாற்றியுள்ளோம். இதன் காரணமாக மாணவர்கள் பொறியியல் படிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேருவதற்காக நடப்பாண்டு மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 31,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் சலுகை அறிவித்துள்ளதன் அடிப்படையில் நடப்பாண்டு 5024 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் நிறைய மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும். ஸ்கில் டெவலப்மெண்ட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் அதற்காக ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வர உள்ளது. அதன்பிறகு கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார் அமைச்சர் பொன்முடி. பொறியியல் கல்லூரிகளின் அடிப்படை கட்டமைப்பு குறித்தும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications