பொறியியல் கல்வி படிக்க மாணவர்கள் ஆர்வம்..கலந்தாய்வு எப்போது..அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்
சென்னை: பொறியியல் படிப்பதற்காக இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 18,610 விண்ணப்பங்கள் கூடுதலாக வரப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழ்நாட்டில் தொடங்கும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் முடிந்து ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது, அதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,510 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர் என்றார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பொறியியல் படிப்பிற்காக தொழிற்சாலைகளுடன் இணைந்து பாடத்திட்டங்களை மாற்றியுள்ளோம். இதன் காரணமாக மாணவர்கள் பொறியியல் படிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேருவதற்காக நடப்பாண்டு மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 31,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் சலுகை அறிவித்துள்ளதன் அடிப்படையில் நடப்பாண்டு 5024 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் நிறைய மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும். ஸ்கில் டெவலப்மெண்ட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் அதற்காக ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வர உள்ளது. அதன்பிறகு கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார் அமைச்சர் பொன்முடி. பொறியியல் கல்லூரிகளின் அடிப்படை கட்டமைப்பு குறித்தும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications