சினிமாவில் வருபவர்கள் யாரும் ஹீரோக்கள் இல்லை.. நடிகர் தாமு பேச்சு

சினிமாவை ஒரு எடுத்துக்காட்டாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள கூடாது என பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் தாமு பேசினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவை ஒரு எடுத்துக்காட்டாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள கூடாது என பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் தாமு பேசினார்.

பெரம்பூரில் அரசு பள்ளியில் 10,11,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சென்னை காவல் துறை சார்பில் தலைமை பண்பு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தாமு , புளியந்தோப்பு மாவட்ட காவல் துணை ஆணையர் சாய் சரண் தேஜஸ்ரீ , உதவி ஆணையர் ஹரிஹரன் , ஆய்வாளர்கள் சிட்டி பாபு, தமிழ் வாணன், அழகேசன், ஜெகன் கலந்து கொண்டனர்.

Students should not take Cinema as an example says Actor Dhamu

நிகழ்ச்சியில் மாணவர்களின் மத்தியில் நடிகர் தாமு பேசியதாவது: சினிமாவை பார்த்து மாணவர்கள் கெட்டு போக கூடாது, சினிமாவை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ள கூடாது சினிமாவில் வருபவர்கள் யாரும் ஹீரோக்கள் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் நிஜத்தில் உங்களுடன் இருக்கும் தாய் , தந்தை தான் உண்மையான ஹீரோ என பேசினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவர் பெற்ற வெற்றிகள், மாணவர்களை அவர் எவ்வாறு வழி நடத்தினார், என பல விதமான தகவல்களை மாணவர்களின் மத்தியில் பேசி மாணவர்களை நடிகர் தாமு ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

என பல விதமான தகவல்களை மாணவர்களின் மத்தியில் பேசி மாணவர்களை நடிகர் தாமு ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+